ஞாயிறு, 29 ஏப்ரல், 2012

நிஜங்கள்.....


இடுக்கண்
வரும்வரையில்
நிமிர்ந்து நிற்கும்...
அகந்தை..!
-------------------------------
வாழ்ந்து வீழ்ந்த
பசுமைகள்....
சருகுகள்..
-----------------------------------
போகுமிடம்
அறியாமல் நாம்..!
வாழ்க்கைப் பயணம்..!
------------------------------------
 


இனிய இல்லறத்தை
நகலாய்க் காட்டும்..
ஆலமரம்..
------------------------------------
தள்ளாடும் மனதோடு
நிமிர்ந்து நிற்கின்றான்..
காவலன்...
------------------------------------
ஆயிரம் கவலைகள்..!
ஒரே வடிகால்..
கண்ணீர்..
--------------------------------
ஆயுதங்கள்
தேவையில்லை
வார்த்தைகள் போதும்..
---------------------------------------
அகமும் புறமும்
அடுத்தவர்க்கு காட்டிடும்
பூதக்கண்ணாடி ..!
முகம்..!
-----------------------------------------
உன் நினைவுகள்
மின்சாரம் இல்லாமல்
என் அறிவை நிரப்பிடும்
அச்சு எந்திரம் ..!
-----------------------------------------
பெண் மனம்..!
எப்போதும்
தூங்கும் எரிமலை..!
--------------------------------------------
ஊடல்..
அடிக்கடி எரியுது
சொக்கபனை..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக