புதன், 11 ஏப்ரல், 2012

நாளை நானும்...!



புதிதாய் பிற...
நிஜம் காண்.....
நிழல் அழி...
நியாயம் பேசு..
கனவு மற..
கற்பனை அழி ..
கலக்கம் புதை
பாதை காண்...
செயல் புரி
வெற்றி கொள்..
முரண் பேசு
நிமிரு..
திமிறு..
நொறுங்கு
உடைந்து அழு
மௌனம்...
தெளிவு காண்
தடை
தகரு
வெட்டு
துளிராகு
பாறை மோது
பறந்து போ..
சுவர்களை உடை
கடலைப் பார்
மேகத்துக்குள் செல்
வானத்தை மடக்கு
பூமியை சுற்று
அன்பு காண்
இன்பம் காண்
கனிவு பேசு
இனிமை காண்
புன்னகை
நிறைய கொடு..
இல்லை..உனக்கில்லை
உழை...
பெண்ணை சமமாக்கு
உன்னை நேசி
போராடு
உரிமை கொள்
விழுவதை நிறுத்து
நிமிர்ந்து நில்
பொங்குக
ஆற்றாமையில்லை
உறுதியாய் இரு
விவாதி
விஷயமறி
பழமை பேசு
புதுமை காண்
வேஷம் அகல்
செதுக்கு சிந்தனை
இயல்பாய் இரு
மாற்றம் தேடு
காலம் தொழு
ஆற்றல் ஊற்று
உண்மை பேசு
மனத்தைக் கேள்
மானுடம் கொண்டாடு
யாவையும் கல்
நட்பு கொள்
கொள்கை கொள்
பற்று வை
சந்தோஷமாய் இரு
சரித்திரம் படை
வாழ்வை ரசி
நிமிடத்தில் வாழ்...
நாளை.....நீதான்....
பேசப்படுவாய்...!
---------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக