ஞாயிறு, 13 மே, 2012

சுவாதி நட்சத்திரம்

 
உள்ளத்தைத் தொட்டு
உட்புகுந்த கவிதை..
இது நிழல் அல்ல...
நிஜம்...!
உணர்வல்ல....
வாழ்க்கை..!
காலங்கள் ஓடுது
எவருக்கோ...
கோலங்கள் காயுது
யாருக்கோ..
உள்ளம் உருகுது
கண்ணனுக்கு...!

கேட்டதை கொடுப்பவன்
கண்ணன்...
கேட்டதும் கொடுப்பவன்
கண்ணன்...
கேட்காததைக் கொடுப்பவன்
கண்ணன்
கேட்காமலும் கொடுப்பவன்
கண்ணன்...

உன்னதம் கொடுப்பான்
அவன்..
தன்னையும்  கொடுப்பான்
அவன்..
உள்ளத்தைக் கெடுப்பான்
அவன்....!
ஒளிந்து நின்று சிரிப்பான்
அவன்...!..

செல்லரித்த இதயத்தில்
சுவாதி  நட்சத்திரம்
அவனாலே...அவனாலே...!.
நித்தம் பூத்து வாசம்
அவனைத்  தேடி தேடி..
கால்கள் எங்கே நடந்தாலும்...
எந்தன் ..கால்கள்...அவனது
கோபுரவாசலில் தான்..!
காத்திடுவான்....
கண்ணன் என..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக