ஞாயிறு, 13 மே, 2012

"ஆலமரத்துக் கிளிகள்..

"மூடிய கண்களும்
பார்க்கிறதே...
கனவு..! "
----------------------------------
"நெருப்பு
கேட்கிறது உணவு
பசி..! "
------------------------------------
"இளமைக்கு
அணிகலன்
காதல்..! "
-------------------------------------
"நீ
நெருப்பு
முடிவில்
நான் சாம்பல்..! "
-------------------------------------
"திரு தேடும்...
தேவை
திரு மதி..! "
---------------------------------------
"நேற்று தொட்டிலில்
இன்று கட்டிலில்
நாளை கல்லறையில்..!"
---------------------------------------
"மின்சாரம்
இல்லாமலே இயங்கும்
இதயம்..!"
----------------------------------------
குடையின் கீழ் நான்
மழை வருமென
ஏமாற்றியது வானம்..!
-----------------------------------------
"பூமியில்
கையூன்றி எழுந்தது..
மரம்..!"
-----------------------------------------
"சுடர்
அழுதழுது அடங்குது
மெழுகுவர்த்தி..!"
-----------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக