ஞாயிறு, 13 மே, 2012

என்னைத் தேடி... உன்னைக் கண்டேன்...!

கதவு திறந்தது...
ஜன்னன்லும்  கூடவே,,
விழிகளுள்.. ஒளி ஏற்றி 
காத்தது நெஞ்சம்......!
உந்தன்..வரவுக்காக...
சுவடின் நிசப்தம்...
ஏனோ....
மறந்தனையோ..?

வெறுமை உள்ளே...!
விரட்டியது வெளியே...
ஆரவாரமற்ற 
தெருக்களில்
கொலுசு சுமந்த 
பாதத்தோடு 
உன் நினைவு 
சுமந்த நெஞ்சோடும்..
இறங்கி நடக்கிறேன்...!
தேடும் கண்கள் 
வீதியை அளக்க..
விதி அழைக்கும்  
பாதை..தான்.. 
உந்தன்...
இருப்பிடமோ..?

காலங்கள் பாதச் 
சுவடுகளாய்  நீள் 
கோட்டில் அளக்க..
வாழ்நாள் போலவா..
நீளும் பயணம்....!!
தேடும் மனதுக்கு..
துணையாய்..!
கன..மேகம்..கூடவே..!
எங்கிருந்தோ...
குழலிசையாய்
உன் கீதம் பாதை சொல்ல..
தொடர்கிறேன்...
இசையின் திசையை.....!
கீதத்தை..அடையுமா....
கொலுசொலி...?!

மாலையும் மயங்கி 
புள்ளினம்..கூடு சேர
மேகங்கள் கலைய
மெல்ல இருள் சூழ
நம்பிக்கையாய்...
நட்சத்திரங்கள் 
சிநேகமாய் கைகுலுக்க..!
வழி சொல்லிப் பறந்தது
பச்சைக்கிளி...!

பூந்தென்றல் தூதுவிட
கடலலைகள் தேடு ...
தேடென அடுத்தடுத்து 
உற்சாகமூட்ட
நெஞ்சுள் கனல் மூள..
திசையறியாத பயணம்..
மெத்தை விரித்த நிலம்..
இன்று முடிந்து நாளை 
துவங்கும் வேளை....
மலைமுகட்டில் ..இருமரங்கள் 
கைகொட்டி உண்டானது
என் வழிக்கான விளக்கு..!


யாரைத் தேடுகிறாய்...?
எங்கே ஓடுகிறாய்...
என்னோடு வா என
அழைத்தது கொள்ளிடம்...!
கண்ணொளி கடந்து
நீர்விளக்கேற்றி..எனையே 
தேற்றித் தேடுகிறேன்..!
குழல் தந்த வழியோசை...
தொடர்ந்து செல்லும் 
மணியோசை.. தேடும்..!

உயிர் காத்த கீதம்....
மெல்ல மெல்ல காற்றில் 
பின்வாங்க...கால் தடுமாற
கொலுசின் ஒலியும் 
தனை இழக்க..
என் உயிரை 
அறுக்கும்..சக்தி 
உன் உயிருக்குத்தான்..!
மெல்ல மெல்ல 
என் உயிரும்..
கீதத்தோடு கலக்கும் 
வேகத்தோடு..
வைரத்தை வைரம் 
அறுத்தது போல்....
காற்றோடு கலந்து 
இணைந்தது..!
வைர உயிர்கள்....!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக