ஞாயிறு, 13 மே, 2012

பொம்மலாட்ட அரங்கேற்றம்..!

 Pommalaattam.jpg
படித்துப் பட்டம்
பெறுவதற்குள்
பன்னாட்டு வேலைக்கு
அழைப்பு...
இருபத்தியொரு
வயதில்..மாதம்..
ஐம்பதாயிரத்துக்கு
உத்திரவாதம்..!

வாணியும்...ஸ்ரீ யும்
இணைய....!
அழகும்...வீரமும் 
கூடி நிற்க...
முப்பெருந் தேவியரின்....
யௌவன கர்வம்....!
அடுத்தவர் கண்களுக்கு
நித்தம் விருந்து..!

மன மகுடம்....உயர உயர...
குணம் குன்றலானதோ...
கண் பார்க்கும் எதுவும்..
துச்சமாகி..பழமை...
பஞ்சாங்கமாகி...!
வருமானம் தந்ததோ...
உயர்ந்த தன்மானம்.....!

காதோடு இணைந்த
ஒலிபேசி..
தோளோடு தவழும்
மடிகணினி..
கறுப்புக் கண்ணாடிக்
குள்ளிருந்து...
தூக்கி எறியும்
பார்வைகள்..!
வார இறுதியில்....
உல்லாசச்...சுற்றுலா....!

உலக உண்மை
புரியாது...
கவலை எதுவும்
அறியாது...
பெரியோர் அறிவுரை
கேளாது..
வெறும் தலையாட்டலும்...
தறுதலை பதிலுமாய்...
அனைத்தையும்....
நிராகரிக்கும்..!

பச்சை நோட்டுக்கள்...
கத்தை கத்தையாய்...
இயந்திரத்தில்
அள்ளி அள்ளி...
சென்டுக்கும்...
செருப்புக்கும்...
அழகு நிலைய
கூடத்திற்கும்
தெளிக்க....பணம் பறக்க...
வேண்டாம் என 
சொல்லப் போனால்....
சுதந்திரம் போச்சு....என
ஏக வசனத்தில் வெடிக்க...
பன்னாட்டை.....
உள்நாட்டில்..
உலவ.. விட்டு...உலாவ..!

வேடிக்கை பார்க்கும்
பெற்றோர்...
வளர்ந்த பெண்ணின்
வாய்க்கு
பயந்து.....பயந்தே....
எண்ணும்..
பணத்தை கண்டு
வாயடைந்து...
பெருமை பொங்கப்
பார்த்து...
கழன்று விழும்
அச்சாணி....!
மனசுக்குள்
மணி அடிக்க...!
பெற்றவரின்
மன உளைச்சல்..!

பெருமை எல்லாம் 
ஊருக்குத் தான்..
உள்ளுக்குள்ளே ...
பொறுமும்  மனசு..!
கால்கட்டுப் போட்டால்..
வருவாளோ..கைபிடிக்குள்....
வந்த வரன்.. யாவும்
புறக்கணித்து....
புதுத் துணையோடு
நுழைந்தாள்....
ஆசை மகள்...!
ஏமாளி பெற்றோர்கள்..
கோமாளியாகி..
ஊரார் முன்னிலையில்...
பெருமைக்காக
தலையசைத்தது..
பொம்மலாட்ட வாழ்க்கையில்...!
===============================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக