திங்கள், 7 மே, 2012

ஆசைக் கனவு...

இதோ...
உறங்கிக் கிடந்த
மனதுக்குள்
ஏக்கத்தைக் 
கொடுக்கும் கனவு..!

இதோ..
மூடிய விழிக்குள்
நிஜத்தை 
காட்டிக் நடிக்கும்
கனவு..!

இதோ..
உள்ளத்தின் 
அடியிலே
துள்ளிக் கொண்டிருக்கும்
கனவு..!

இதோ..
வாசல் கதவை
சார்த்தி வைத்தாலும்
ஜன்னல் வழியாக
எட்டிப் பார்க்கும்
கனவு..!

இதோ..
ஒரே இரவு..
கோடிக் கணக்கில்..
விதவிதமாய்
கனவுகள்..!

இதோ..
கேட்கிறேன்....
யாரென்று..?
கனவை..!


இதோ..
என்னையா...
தெரியலை...!
ஆசையடா.. உன்
மனதுக்குள் 
விழித்திருக்கும்
ஆசையடா  நான்..!

இதோ..
அட..ஆசை வேண்டாம்..
அட..கனவு வேண்டுமே..!!
நீயும் இருந்துவிட்டுப் போ..
என் ஆசையே..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக