ஞாயிறு, 13 மே, 2012

கலியுகக் கருணா...!

வங்கிக்கொரு 
கடன் அட்டையாம்... 
வீடு தேடி வந்த 
மகாலட்சுமி....
நீ தானோ..!
கைப்பையில் 
காசே  வேண்டாம்..
தோல் பைக்குள்
பத்திரமாய்...நீ.. 
இருந்தால்....!

அளவு தெரிந்தும்...
தெரியாமலும்
வேண்டியதும் 
வேண்டாததும்...
இன்னும்..இன்னும் 
லிமிட் இருக்குன்னு...
அளவைத் தாண்டி ..
நீ தேய...தேய...
அட்சய பாத்திரம் நீ...!
ரகசியமாய் என்னைப் 
பிச்சைப் 
பாத்திரமாக்கினாய்...!

கலியுகக் கர்ணா..
ஆபத் பாந்தவா...
நீ இருக்கையில் 
எத்தனை தீபாவளி...
எத்தனை பொங்கல்.. 
வந்தாலும்..தாங்கும் 
என நான்..!
அற்புத விளக்காய் 
உன்னை தேய்க்க..
புதியவை எல்லாம் 
வீட்டுக்குளே....
கடனை ஏறியது....
தலைக்குள்ளே...!

மூன்றாம் நாளே....
வட்டி குட்டி போட்டு..
பாய்போல்....
கணக்கு வர...!
எனக்கோ...
மயக்கம் வர...!
அளவைத்  
தாண்டியதால்..
அழுத்தம்.... 
கூடிப்போய்..
கர்ணன் இல்லை....
கலியுகத்தில்..
கடன்  அட்டை.....
வழுக்கு மரம்...!

சாண் ஏறி 
முழம் சறுக்கி...
கட்டக் கட்ட...
கடலில் கரைத்த 
பெருங்காயமாய்..!
வாசலில் வந்து 
நிற்காத 
ஈட்டிக் காரனாக...!
மூன்றங்குலம்....
கழுத்தை இறுக்க..
கனவிலும்... 
கடன் தொல்லை...!
மாற்று வழியறியாது....
பல்லாங்குழியாடி..
அட்டையை 
மொட்டையாக்கி...... 
மூச்சுவிட்டேன்...!

கைபேசியில் புது.... அழைப்பு...
"பொங்கல் சலுகையாய்"....
கடன் அட்டைத் திருவிழாவாம்....
பதிவும் இல்லை..
கட்டணமும் இல்லை..
ஒரு லட்சம் ஆரம்ப அளவில்....
இலவசமாய்..
உங்கள் வீடு தேடி வரும்........
எப்போ அனுப்பி வைப்பது..?
சிணுங்கியது மணிக் குரல்...!
...........................................................................
...........................................................................
எனக்குக்..  கைபேசியே... 
வேண்டாம்......!
இணைப்பை துண்டித்து 
தப்பிவிட்டேன் என 
பெருமூச்சு விட்டேன்..!
================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக