திங்கள், 14 மே, 2012

வந்ததும்......சென்றதும்...!

துவண்ட பயிரை
துளிர்க்க வைக்க 
பொங்கி வந்தாள்
எங்கிருந்தோ...
வைகை...!
புதுப்புனலாய்..!
-------------------------------
வான்மேகம் தந்த 
மழைபோல் நீ
வந்த மோகத்தில்
நான் அறிஞன்...!
வானவில்லாய் நீ 
மறைந்த போது...
நானே மூடன்..!
------------------------------
அத்தனைக்கும்
சாட்சியாய்....
திருட்டு..கொலை..
கொள்ளை...கபடம்..!
கூட்டம்...ஆட்டம்...!
அத்தனைக்கும்
சாட்சியாய்...கல்லாக
பார்த்திருந்தது..
ஆற்றங்கரை நடுவே
கல்மண்டபம்..!
-----------------------------------
கவிஞனுக்கு
கவிதை..கடலைக்
கண்டதும் அலை
அலையாய்..!
கவி பாரதிக்கோ..!
கடலாகிறது
அலை அலையாய்..
கவிதைக் கடல்..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக