ஞாயிறு, 13 மே, 2012

சிலை பேசியது.....

ஞான விளிம்பில் ...
உயிர் நிலைக்க
மோன தவத்தில் 
மனம் லயிக்க..!

மனக்கண் முன்னே 
மாபெரும் சிலை..
மரச்சிலை....கற்சிலை 
பளிங்குசிலை....!

பொற்சிலை 
பிரம்மாண்ட
மூர்த்தம்...
ஏகபத மூர்த்தம்...!

குவிந்த அழகு 
நிறைந்த அழகு..
மனம் உட்புக 
உயிர் கரைய...!

மணி இசைய...
மண் அசைய..
மரம் மகிழ..
காற்றும் ஓத..

அண்டமும் ஆட
அகிலமும் அசங்க.
பேசியது அனைத்தும்...
ஆடியது அனைத்தும்..!

பாடியது பலதும்..
சிலையும் கலையும்...
சிரித்து களிக்க..
கல்லென நான்....!

சிலைக்கு முன்னே...
அடித்த சிலையாகி..
அடங்கிப் போனேன்....
அகிலம்  பேசக் கேட்டு...!
===============================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக