திங்கள், 7 மே, 2012

காதல்மரம்


இதயப் பாத்திக்குள் 
பிரம்மன் இட்ட 
காதல் வித்து..!
காலம் வரும் வரை
ஆழத்தில் வீரியமாய்..!

பருவ காலங்கள்
மாறி வர...
பருவங்களும்
மாறி வர..
சட்டென மாற்றம்..
மனதுக்குள்..வைத்த
விதை வேர் பிடிக்க..!

விதி எடுக்கிறது அதன்
எழுத்தாணி...!
புயல் கூட தென்றலாய்..
தனக்கென சுற்றும் 
தனி பூமியென...
காதல் மனம் ..
திண்டாடும்..!

கண்கள் குருடாக..
உலக மாயை தான்..
அழுத்தி எடுக்கும் வேளை....
ஆன்மாவின் இரட்டை..
ஆழப்பதிக்க..!

இதயத்தில் வேர்
ஊன்றி எழுந்து
நின்றது காதல்மரம்..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக