ஞாயிறு, 10 ஜூன், 2012

தேடினேன் என்னை...!



ஓர்... அந்தி மாலை...
ஒற்றையடிப் பாதை...

பின் தொடர்ந்து நடக்கும்
கூடவே என் கால்தடங்கள் .

சிநேகமாய் என் நிழலும்...
மண்ணுக்குள் பதிய..

தேடினேன் என்னையே...
தொலைத்தது எங்கே..?

நிலத்தை விட்டு...உயர்
வானத்தில் தேடினேன்...

மங்கிய  நிலவு  எனைப் பார்த்து
சிநேகமாய்...சிரித்தது..!

புவியில் தடம் பதித்த எனக்கு..
நிலவோடு தோழமையா..!!

புன்னகைத்த மனது...
பாரசூட்டில்.பறந்தது ..!
(அல்லியாய் மலர்ந்தது...)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக