புதன், 20 ஜூன், 2012

கண்களை தானம் செய்வோம்....!


பூவுலகின் உதயத்திலே.....
ஓர் உயரம்
கண்டு விட்டோம்
உலகம் பார்த்து
வியந்த உள்ளம்...
உள்ளம் பார்க்க
விரைந்து வா....!


இருட்டில் வாழும்
இதயங்களே....
இறைவன் வாழும்
இதயங்களாம்...!
நாம் பார்த்த உலகம் தனை
அவரும் பார்க்க
வாய்ப்பளிப்போம்...!


இறைவன் தந்ததை
மீண்டும் அவருக்கே...
பதிந்து தந்திடுவோம்...!
நாமாக இருந்து
பேசிய விழிகள்
நமக்குப் பின்பும்
பார்க்கட்டுமே....!


இன்று நம் நெஞ்சினில்
இரக்கம் இருந்தால்....
நாளை..இன்னொரு
முகத்தில் இணைந்திடும்
ஜீவனாக விழிகள்..!


வண்ண உலகைப்
பார்த்த உயிர்கள்
நம்முயிரை வாழுத்துமே...
பிறந்த பயன் கிட்டிடுமே..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக