திங்கள், 25 ஜூன், 2012

ஆயிரத்தில் ஒருவனையா...நீ..!





சிறுகூடல்பட்டி விட்டு
சிகாகோ வரை காற்றுக்
கோடிழுத்த கவியரசர் ....நிந்தன்
மூலக்கனல் கண்ட யாவும்..
ராகங்கள் பாடியதே...!


ஏழ்மையின் வலிகளுக்கு
வரியால் மயிலிறகாக்கி
மருந்த்திட்ட மருந்த்துவனே..!
இயற்கையை மூட்டைகட்டி
முத்துக் கடலுள் பொக்கிஷமாய்
புதைத்த முத்தையனே...!
திரைக்கதைக்கு மாயாவியாக
திரவியங்கள் சேர்த்தாய்..
சோம்பித் திரியும்
மனங்களுக்கு உற்சாக பானமாய்..!
உற்சாக உள்ளங்களுக்கு
உந்து சக்தியாக..
செவித் திறன் இழந்தவர்
விழிகளால் கேட்டார்...
விழித் திறன் இழந்தவர்
செவிகளால் பார்த்தார் !
மொழித் திறன் இழந்தவர்
இதயத்தால் இசைத்தார் !
ரசனை பெற்றவர்....
தம்மையே இழந்தார் !
ரசிக்கா திருந்தவர்...
நிறைவை இழந்தார்...!

எழுத்தாணியே வாய்ப்பாக
அமைந்ததனால்....ஒவ்வொரு
இதயத்தையும் எழுத்தால்
தட்டிச் சென்றாய்....!

அத்தமுள்ள இந்துமதம்
விழிகளுக்கு ஒளியானது...!
பகவத் கீதை படைத்து
பாதைகள் காட்டிட..
வனவாசமும், மனவாசமும்
உமது விலாசத்துக்கே
இழுத்துச் சென்றது..!
 

திரைவானில் மலர் வாசம்
வீசச்செய்த கவிச்செம்மல்...
சென்ற பாதை வேறாகினும்
நீ வகுத்த சாலையில் தான்
இன்னும் எங்கள் பயணம் !
ஒரே புகழ்க் கொடி ஏந்திச்
சுற்றும் இந்த பூமி.....ஏங்கும்
மனமெல்லாம் உந்தன்
மண்வாசம் சாமி..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக