சனி, 9 ஜூன், 2012

மணி மகுடம்...!

 

நான் எனும் புதையலாய் நீ
என்னுள்   ஒளித்து

வாழ் என வாழ்த்தி
பாழ் எய்துமோ கருதி 

அவன் உள் மறைந்து

காண் எனப் படைத்து 
பேண் என உரைத்து
ஊண் உறை வளர்த்து 

எண்சாண் அடைந்து

ஓர்பிடி உலகாய் உள்வாங்கி 
தேங்கி நிற்கும் ஒளியை
தடை நீக்கி தருவிக்கும் 

தருவே....அருவே....திருவே....

அன்பெனும்  ஊற்றாய் 
அள்ளப் பெருக்கும் பாத்திரமே...
அட்சயமே...!!!

உன்னுள் புதையல்
வேரோடு 
கண்டோமே....
ஆள்கின்றோம்..
அவரவர்  புதையலாய் ......
தாங்கி  வழியும்...
மணி மகுடம்...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக