சனி, 9 ஜூன், 2012

தூரம் அதிகமில்லை...!



 

 
வீட்டிற்கும் வீதிக்கும்...
தூரம் அதிகமில்லை...
வீணாகப் போனாயே..!
கட்டியவளின் கண்ணீரோ..
பிள்ளைகளின் பாசமோ..
உன் கண்ணைத் திறக்காதோ?
தாயின் பஞ்சுமன ஈரமும்..
தந்தையின் தாழ்ந்தபார்வை..
ஈட்டியாய் இடிக்கலையா..?
தூரத்து உறவுகள் ..உன்னை 
வெறுத்துத்  துரத்தியும்..
தோழனே....இகழ்ந்தும் . கூடவா?
வருமானம் கரைந்து 
திண்டாடும் நிலைவந்துமா...?
உந்தன்  புத்தி பதுங்குது ..!
ஒவ்வொரு நாளும் கண்டதை 
விற்று.. உன் போதையை 
நிறுத்தி.... நீ தள்ளாடுகிறாய்..!.
என்றேனும் திருந்துவான் 
என இலவு காத்த கிளியாய்..!
உன் குடும்பம் உனக்காக...!
எதுவுமே உரைக்காமல்...உன்
உணர்வுக்கு  ஊற்றி நிறைக்க..
போதையில்..உணர்விழந்த ..நீ..!
வீதியில் வீழ்ந்து கிடக்கும் ..
உறவுகள் உன்னை உதறுமடா..
விதி வலிஎதைச்  சிரிக்குமடா..!
நீ விழித்தபோதே...அடங்கிவிடு....
போதையை விரட்டிவிடு...
புத்தியை மாற்றிவிடு...!
தருணம் தாண்டிவிட்டால்,,,,
வீட்டிற்கும் வீதிக்கும்...
தூரம் அதிகம் இல்லை....!
----------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக