வியாழன், 26 ஜூலை, 2012

ஹைதராபாத் சமையல்:



 


ருசியான பாகாரே பைகன்  செய்யும் முறை.

(Baghare Baigan Recipe)


தேவையானவைகள்:

அரை கிலோ குட்டி கத்திரிக்காய்கள்
சிறிய வெங்காயம்       - 4
இஞ்சி                                 - சின்னத் துண்டு
பூண்டு பல்                       - இரண்டு
தனியா விதை                - 2 ஸ்பூன்
வெள்ளை  எள்ளு          - 5 ஸ்பூன்
நிலக்கடலைகள்           - 8 ஸ்பூன்
ஜீரகம்                                 - 1 ஸ்பூன்
கசகசா                               - அரை  ஸ்பூன்
கொப்பரைத் துருவல்  - 4 ஸ்பூன் அளவு
மெந்தியம்                         - அரை ஸ்பூன்
மஞ்சள் பொடி                 - அரை ஸ்பூன்
மிளகாய் பொடி               - ஒரு ஸ்பூன் அளவில்
வெல்லம் பொடித்தது  - ஒரு ஸ்பூன்
புளி                                      -  பெரிய  எலுமிச்சை அளவு
கருவேப்பலை               -  ஒரு கொத்து
உப்பு                                    - தேவைக்கேற்ப
நல்லெண்ணெய்           -  இரண்டு கரண்டி அளவில்

செய்யும் முறை :
  • புளியை ஒரு டம்ளர் நீரில் ஊறவைத்து கசக்கிச் சாறு எடுத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
  • குட்டிக் கத்திரிக்காய்களை காம்பு நீக்கி அங்கிருந்து குறுக்கே இரண்டு இன்ச் அளவுக்கு + மாதிரி
    வெட்டிக் கொள்ளவும். அடி வரை வெட்டக் கூடாது. (எண்ணைக் கத்திரிக்காய்க்கு வெட்டுவது போல வெட்டவும்)
  • வெங்காயத்தை சின்னதாக நறுக்கி பொன்னிறமாக வதக்கி  வைத்துக் கொள்ளவும்.
  • மிதமான சூட்டில் : தனியா, எள்ளு, நிலக்கடலை, சீரகம், கசகசா, கொப்பரை துருவல், மெந்தியம் அனைத்தையும் சேர்த்து வாசனை வரும் வரை வறுத்து வைத்துக் கொள்ளவும்.
  • மேலே சொன்ன வறுத்து வைத்த மசாலாவுடன் , வதக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, உப்பு, மஞ்சள் பொடி, மிளகாய்பொடி, வெல்லம் அனைத்தையும் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  • அரைத்த விழுதை பாதியாக்கி அதை புளித்தண்ணீரில் கலக்கி வைத்துக் கொள்ளவும்.
  • மீதி விழுதை ஸ்பூனால் எடுத்து குட்டி கத்திரிக்காய்களின் உள்ளே அடைக்கவும்.
  • அடி கனமான வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, கருவேப்பளையைப் பொறித்து கொள்ளவும்
  • மசாலா அடைத்த கத்திரிக்காய்களை எண்ணெயோடு சேர்த்து பத்து நிமிடங்கள் வதக்கவும்,அத்தோடு கூட
  • புளித்தண்ணீரில் கரைத்த மசாலா விழுதையும் மெல்லக் கலந்து வேக வைக்கவும்.
  • தேவையானால் சிறிது தண்ணீர் சேர்க்கலாம். மூடியைப் போட்டு மூடி விட்டு, அப்பப்போ சிறிது கரண்டியால் கிளறி விடவும்.
  • கத்திரிக்காய்கள் வெந்து எண்ணெய் பிரிந்து வாணலி ஓரம் மிதந்து வரும் பதம் வரை மிதமான தீயில் வேகவைக்கவும்.
  • கொத்தமல்லித் தழைகளை பொடியாக நறுக்கிச் சேர்க்கவும்.
  • சூடாகப் பரிமாற்ற ருசியான பகாரா பைகன்.
  • சாதத்திற்கும், ரொட்டிக்கும் தொட்டுக் கொள்ள மிகவும் சுவையானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக