சனி, 18 ஆகஸ்ட், 2012

பறக்கும் வரையில்...!



மழை பொழியாத வானம்..
பாளமாய் வெடித்த பூமி...
உறவென்பதை அறிந்தபோது 
மனதின் இடைவெளி 
புரிந்த போது...புரியாமல் 
போன காலத்தை
எண்ணி எண்ணி என் செய்ய?

பாதை விலகிய ஜோடி  நதி
திசை திரும்பிய தென்றலாய்
நின்று போன அருவியாய்
உறைந்து போன கடலாக
சிறகுகள் உதறிய பறவையாய்..!

பாதம் பட்ட பூமிச் சுவடுகள்
ஆகாயம் பார்த்து காயம் ஆற..
எண்ணங்கள் சிதறிய கோலம்
அங்கங்கே  நினைவுகளாய்..!
நூலும் வாலுமாய்
உறவால் பறந்த பட்டம் 

பட்டத்தைத் தேடும் நூலாக
வாலறுந்த பட்டமாக
பரந்த வெளி வானை விட்டு
காற்றுத் தள்ள மூச்சு முட்ட
எந்த மின்கம்பியோ....
கொடிமரமோ...மரக்கிளையோ...
வீழ்ந்து கொண்டிருந்தது
வெறும் வண்ணக் காகிதமாய்.!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக