வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

கூழாங்கற்கள்...!

 
 


வங்கிக்கெல்லாம்
திடீர் வேலைநிறுத்தம்...
மூச்சுக் காற்று
பயமுறுத்தியது....
நாளை நாமும்..!
---------------------------------------


இயற்கை
செய்த ஒத்திகை
இலவசமாய்
மரணங்கள்..!
-------------------------------------------


ராப்பகலாய்
சிற்ப்பங்கள் பல
வடித்து வடித்து
உயிரூட்டிய சிற்பி
உயிரற்ற சிலையாக
கையில் உளியோடு..
"பிணமாக"
---------------------------------------------


கண்ணீரால்
முகத்தைக் கழுவாதே
பயத்தால்
இதயத்தைக் கழுவாதே
இதயத்தால் முகத்தைத்
துடைத்து விடு..!
----------------------------------------------


மனமே...நீ
கடல்நீராக
மாறிவிடேன்...
நானாவேன்
மழையாக..!
-------------------------------------------------


பலரின் வாழ்க்கை
ஒருவன் கையில்
ஓடிக் கொண்டிருக்கிறது..
வாகனமாய்..!
------------------------------------------------


கண்களை மூடிக்கொண்டு
சட்டத்தின் பொத்தல்களைப்
பார்க்காமல் தவிர்க்கிறாயோ?
நீதி தேவதை..!
------------------------------------------------


"சொல்வதெல்லாம் உண்மை"
சத்தியம் செய்து
ஜெயித்தது...
"அநீதி"
-----------------------------------------------
விஷவாயு
மூச்சானதால்
கழிவுத் துப்புரவாளன்
மூர்ச்சையானான்
சாலையோரம்...தியாகியாக!
-------------------------------------------------


ஒருவன் வளமாய்
வாழ
வழியெல்லாம்
வழிப்பறி..!
--------------------------------------------------


மனிதனே
மனிதநேயம்
மறக்கவேன்றா
உனக்கு மட்டும் ஆறறிவு?

-----------------------------------------------------


பஞ்சு போன்ற நன்மை
மென்மையாய்..!
நஞ்சு போன்ற தீமை
வன்மையாய்..!

------------------------------------------------------


பார்வையிருந்தும்
எதிலும்
குறுக்கு வழி தான்
மனிதனுக்கு..!

--------------------------------------------------------


அத்தனைக்
குருவிகளுக்கும்
மரக்கிளையில் கூடு..!
உயர்வு எவர்க்கு?

--------------------------------------------------------
உழைப்பவன்
வியர்வை உடலோடு
உழைக்காமல் தின்பவன்
வியர்வை கொழுப்போடு..!

------------------------------------------------------


அடங்கிக் கிடக்கின்றன
விதிகளுக்குள்
காடுகள்..!
---------------------------------------------------------


ஒவ்வொரு வருடமும்
புதுப் பிறவி
டயரி
---------------------------------------------------------
அழகாயிருந்தால்
எழுதாமலே
வீணாகும்
டயரி...!

---------------------------------------------------


வேண்டாத
குழந்தைகளுக்கு
சிமெண்டில் தொட்டில்
குப்பைத்தொட்டி..!

-----------------------------------------------------


வைரஸ் புற்றுக்கு
ஒரே மருந்து
"ஒருவனுக்கு ஒருத்தி"
------------------------------------------------------


தன் மரணத்துக்காக
தயாராகக்
காத்திருக்குது
தீக்குச்சி..!


---------------------------------------------------------
கவலையில் நெஞ்சம்
கல்லானது
மஞ்சம்..!

---------------------------------------------------------


ATM இல்லாத
மனித வங்கிகள்
தான வங்கிகள்..!
(கண் வங்கி/இரத்த வங்கி)

-----------------------------------------------------------


படித்துப் பெற்ற
பட்டத்தை
விழுங்கி ஏப்பம் விட்டது..
"உதவாக்கரை" பட்டம்.
-------------------------------------------------------


இன்றும்..
மதுரையில்..
பாண்டியன்..!
பச்சைக் கொடிக்குத்
தயாராகத் தண்டவாளத்தில்..!
------------------------------------------------------


மரத்தை வெட்டிக்
கொன்று
எரித்தால் தான்
சாம்பலோடு
உறவின் அஸ்தி..!
------------------------------------------------------
கலியுகக் காதல்
சத்தியம் செய்தது
சிதைந்த கரு..!
-----------------------------------------------------


மனப் பறவை
பறந்தது
இளைப்பாற
மரக்கிளையாய்.
உன் இதயம்..!
------------------------------------------------------


என்னைக் கவிஞனாக்கியது
உன் வரவு
பைத்தியமாக்கியது
உன் பிரிவு..!

-------------------------------------------------------
பலியாடு
கெஞ்சியது
என்னை விட்டுடு...
மறு பிறப்பில்
உன்ன விட்டுறேன்..!
-----------------------------------------------------------

வெள்ளைக் கிண்ணத்தில்
மங்கலப் பிரசாதம்
முட்டை..!

=====================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக