செவ்வாய், 21 ஆகஸ்ட், 2012

புதிய பூமி...!


 


பூமி சிரித்தது
அகோரப் பசியில்
உண்டபின்
ஏப்பம் விட்டது..!

கடல் பொங்கி
எழுந்தது...
வாரிச் சுருட்டி
முழுங்கி அடங்கியது..!

தென்றல்
தலை விரித்தாடிப்
பார்த்து அலுப்போடு
தரை சாய்த்தது..!

கோயில் தீபமோ
கோர தாண்டவத்தில்
அகோரமாய் அழித்து
சாம்பலாய்க் கரைத்தது..!

அண்டவெளி
கோலிக்குண்டுகள்
ஒன்றோடொன்று
மோதிச் சிதறியது...!

காலம் கடக்க...
ஒரே நாளில்...
புதிய வானம்...!
புதிய பூமி...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக