வியாழன், 27 செப்டம்பர், 2012

பாடும் மனம்...!




புசிக்கத் தெரிந்த கரமே
உனக்கு சமைக்கத் தெரியாதா?

சமைக்கத் தெரிந்த கரமே 
உனக்கு கொடுக்கத் தெரியாதா?

கொதிக்கத் தெரிந்த உலையே
உனக்கு குக்கர்  தெரியாதா?

எரியத் தெரிந்த அடுப்பே
உனக்கு ப்ரிட்ஜு தெரியாதா?

அரைக்கத் தெரிந்த குழவி 
உனக்கு மிக்சி தெரியாதா?

ஆட்டத் தெரிந்த கல்லே..
உனக்கு கிரைண்டர் தெரியாதா?

ஆவி பறக்கும் இட்டிலி 
உனக்கு பூரி தெரியாதா?

பச்சை காய் கறிகளே.
உனக்கு பழங்கள் தெரியாதா?

படைக்கும் வாழை இலையே...
உனக்கு தட்டே தெரியாதா?

உண்ணத் தெரிந்த கணவா
உனக்கு என்னைத் புரியாதா?

உன்னைப் தெரியும்  தலைவா
எனக்கு மண்ணைத் தெரியாதா..?
களிமண்ணைத் தெரியாதா?




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக