வெள்ளி, 10 மே, 2013

தாயுமாக்கினாள்..!




முல்லைப் பூவாக 
சிரித்தவள் 
வார்த்தை முள்ளாய் 
குத்தும் போது 
இதயம் எட்டி 
நின்றது..
மனதும் விட்டுப் 
பிரிந்தது...

முல்லையின் மொட்டு 
இவள் 
மல்லிகையாய் 
என்னோடு ஒட்டிக் 
கொண்டும் பற்றிக் 
கொண்டும் விடாமல் 
என்னைத் 
தாயுமாக்கினாள்..!

மழை விட்டும் தூவானம் 
விடாமல் மழலை 
உந்தன் மொழி கண்டு..
நானும் தாயானேனே ,,
தன குருதி காக்கும் 
கடமை தந்தைக்கும் 
உண்டென உனைத் 
தாங்கிக் வாங்கிக் 
கொண்டேனே...

சுமந்தவளுக்கு 
நீ சுமையாம் 
வேலைக்கு நீ 
ஒரு தடையாம் 
நிறத்திலும் 
உருவத்திலும் 
நீ எனது 
கண்ணாடியாம் 

தாமரை இலைத் 
தண்ணீராக 
உனைத் தாரை 
வார்த்து விட்டு 
பெண்ணியம் பேசும் 
பேதையவள் ...!

ஆண்களுக்கெதிராக 
ஆயிரம் கொடி உயர்த்த 
முதல் வஞ்சனையாக 
பெண்சிசு பற்றிப் 
பேச மேடை ஏறுகிறாள் 
என்னையும் சேர்த்து 
காற்றில் பறக்க விட..!



புதன், 8 மே, 2013

sai baba...!

வானமும் நானும்..!





மொட்டை மாடி அரண்மனை..!

நித்தம் வானக் கடலில்


மேக அலைகள் தவழ்ந்து அலையும்


நிலவுக்கும் எனக்குமான இடைவெளியில்


மெல்லப் புகுந்து இடை மறிக்கும்


இரவின் தென்றலோ வேறு லோகம்


எனை அழைக்கும்...!


நட்சத்திரப் பூக்கள்


எனைப் பறிக்க மாட்டாயா ?


என ஏங்கிச் சிணுங்கும்...!


அந்தரத்தில் சுதந்திரமாய்


அனைத்தும் மனத்தை அணைக்க


கீழிருந்து அம்மாவின் அசரீரி


கடங்காரி .....அந்த மானத்துல


என்னதான் இருக்கோ..?


என் மானத்தை வாங்காதே....


இறங்கி வந்து தொலை...!


கற்பனைகள் எனை விட்டு இறங்க


கோபம் குடியேறியது மனதில் ...!