சனி, 20 ஜூலை, 2013

வாலி என்றொரு வாலிபன்...!

நரை திரை நிறைந்தும்
திரையுலகத் தாரகையாய்
உணர்வுகளுக்கு உயிர் கொடுத்த
வாலி....நீவிர் நீடூழி வாழி...!
நின் ஆன்மா பறந்தாலும்
பூவுலகில் நீ விதைத்த வித்துக்கள்
ஜீவனோடு வாழும் விந்தை..!
துடிக்க மறந்த இதயமும்
உன் இசையால் அசையும்...!
உன் உயிர்த்துடிப்பு நின்றதெனக்
கேட்ட காதுகள் உனை
இழந்த சோகத்தில் அழும்...!
வாலி எனும் வாலிபனின்
ஜோலியை முடித்த காலனே..
உனைக் கண்டவர் கைது செய்வர்...!
நீ கொண்டு சென்றது ஒன்றல்ல...!
ஓராயிரம் மிஞ்சிய தத்துவங்கள்
கருவிலே உயிர் அழியக்
காலனே நீயே காரணம்...!
அவருக்கில்லை அவசரம்...!
சதம் அடிக்க சிந்தித்த வாலியை
சடக்கென்று வலி கொடுத்து
வலை வீசிப் அடக்கி விட்டாய்..!
சிக்கியது வெறும் உடல்...!
அவர்மனம் உணர்வுகளாய்
பூவுலகில் காற்றோடு ராகமாக...!
ஒவ்வொரு இதய வீட்டிலும்
ராஜாங்கமாக..!
கவிஞனுக்கில்லை சாக்காடு...!
விண்ணுலகில் வாலி
நீ வாழிய நீடு...!
அங்கும் சமைப்பாய் அழகிய சிங்கர்...!
 

1 கருத்து: