வெள்ளி, 4 அக்டோபர், 2013

நவராத்திரி ரதமேறி

Inline image 2

மேகத்துள் மழைநீராய் உறைகின்றாள் - சக்தி
மும்மாரி பொழிந்து பயிர்காப்பாள் - அவளே...
விண்ணுக்கும் மண்ணுக்கும் கற்கண்டாய் - ஒளி
விருந்தளித்து ரக்ஷிக்கும் ரஞ்சிதமே...!


ஆயிரம் நாமங்களை உணர்த்துபவள் - தேவி
கடைக்கண்களால் ஏழுலோகம் காத்தருள்வாள் - அவளே
மலரினுள் மகரந்தமாய் சிரித்துடுவாள் - அலைமகளே
தும்பிசூழும் பங்கயத்து நாயகி..!


மஞ்சளிலே நிறைந்திருப்பாள் மங்களவல்லி - மங்கலக்
குங்குமத்தில் குதூகலிப்பாள் கோமளவல்லி - அவளே
செவ்வரளிப் பூவனத்தில் கொலுவிருப்பாள் - மலைமகளே
வரமளிப்பாய் மங்கலங்கள் தங்கிடவே..!


மனோலயத்துச் செல்வங்களைக் கடாக்ஷமாய் - சொரியும்
வாக்தேவியவள் பூவுலகின் பூஷணி - பரிபூரணி
பிரம்மனுக்கு நாயகியே வேதாந்தரூபிணியே - கலைமகளே
நவராத்திரி ரதமேறி பெருந்தேவியர் வாருமே...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக