வியாழன், 16 ஜனவரி, 2014

தைப்பூச நன்னாளில் வடலூரில் ஜோதி தரிசனம்...!

பெறுநர்: vallamai


உட்பொதிக்கும் படங்கள் 1

தைப்பூச நன்னாளில் வடலூரில் ஜோதி தரிசனம்...!

"அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி" 



தைப்பூசம் என்பது புனிதமான தை மாதத்தில் தமிழர்களால் கொண்டாடப்பட்டு வரும் ஒரு விழாவாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம் என்பர். பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடி வரும் நன் நாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழாவாகும். தை பூசத்தில் சிறப்புகள் பல இருந்தாலும், தைப்பூச ஜோதி தரிசன விழா முக்கியமான ஒன்றாகும். வடலூரில் தைப்பூசம் வெகு சிறப்பாக வருடா வருடம் கொண்டாடப்படுகிறது.

முருகனை நினைத்துருகி கண்ணாடியில் அவன் தரிசனத்தைக் கண்ட வள்ளலார் ராமலிங்க அடிகளார், தம் சித்திவளாகத்தை நிறுவி, அதில் அன்னதானம் செய்த திருநாள் தைப்பூசம். ஆகையால், அன்றைய தினம் வடலூரில் வள்ளலாருக்குரிய தினமாக கொண்டாடப்படுகிறது. தைப்பூசத்தன்று சிறப்பு ஆராதனைகளும் அன்னதானமும் இன்றும் விமரிசையாக நடைபெறுகின்றன. 'ஜோதி தரிசனம்' காண மக்கள் அலை அலையாக வடலூருக்கு வருகை தருவார்கள்.

வள்ளலார் என்பவர் யார்..? தைப் பூச ஜோதி தரிசனம் தான் என்ன? இதோ...!

கடலூருக்கு அருகே உள்ள மருதூர் எனும் கிராமத்தில் ராமையா,சின்னம்மை தம்பதிக்கு 1823-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5-ஆம் நாள் ஐந்தாவது ஆண் குழந்தையாக ராமலிங்கம் பிறந்தார்.

தந்தை காலமான பின்பு தாய் தனது குழந்தைகளோடு சென்னைக்கு வந்து சேர்ந்தார். காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதியிடம் கல்வி பயில ஆரம்பித்தார், அடிக்கடி ராமலிங்கம் கந்தகோட்டத்து கந்தசாமி கோயிலுக்குச் செல்வார். இளம்வயதிலேயே இறைவன் மீது அனேக பாடல்களை இவர்கள் பாடியுள்ளார்.

பள்ளிக்கும் போகாமல், வீட்டிலும் தங்காமல் கோவிலே கதி என்றிருந்த ராமலிங்கத்தை அவரது அண்ணன் கண்டித்து தனது மனைவியிடம் ராமலிங்கத்துக்கு சாப்பாடு போடுவதை நிறுத்துமாறு கடுமையாக உத்தரவிட்டார். பாசமான அண்ணியின் வேண்டுகோளுக்கு இணங்கி ராமலிங்கம் வீட்டில் தங்கி படிப்பதாக உறுதியளித்தார்.

அவர்களது வீட்டில் ராமலிங்கத்துக்கு மாடியறை ஒதுக்கப்பட்டது. சாப்பிடும் நேரம் தவிர மற்ற நேரங்களில் அறையிலேயே தங்கி முருக வழிபாட்டில் தீவிரமாக ஈடுபட்டார். ஒரு நாள் சுவரிலிருந்த முகம் பார்க்கும் கண்ணாடியில் தணிகை முருகன் தனக்குக் காட்சியளித்ததாகப் பரவசப்பட்டுப் பாடல்கள் பாடினார்.

புராண சொற்பொழிவு செய்யும் அண்ணனுக்கு ஒருமுறை உடல்நலம் குன்றியபோது அவர் தம்பி ராமலிங்கத்திடம் சொற்பொழிவு நடக்கவுள்ள இடத்துக்குச் சென்று சில பாடல்களைப் பாடி, தான் வரமுடியாத குறையைத் தீர்த்துவிட்டு வருமாறு கூறினார். அதன்படி ராமலிங்கம் அங்கு சென்றார்.

அன்றைய தினம் சொற்பொழிவைக் கேட்க ஏராளமானோர் கூடியிருந்தனர். அண்ணன் சொன்னபடியே சில பாடல்களை ராமலிங்கம் மனமுருகப் பாடினார். இதன்பின், அவரிடம் ஆன்மீகச் சொற்பொழிவு நிகழ்த்துமாறு அனைவரும் வற்புறுத்தவே, ராமலிங்கமும் அதற்கு இசைந்து இரவில் நெடுநேரம் சொற்பொழிவு செய்யவும், அங்கிருந்தோர் அனைவரும் வியந்து போற்றினர். அப்போது ராமலிங்கத்துக்கு ஒன்பது வயது தான் ஆகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது பன்னிரண்டாம் வயதில் தினமும் ஏழுகிணறு பகுதியிலிருந்து நடந்தே திருவொற்றியூர் சென்று வழிபட்டு வரத் துவங்கினார் ராமலிங்கம், பலரது வற்புறுத்தலுக்கு இணங்க, தன் இருபத்தேழாவது வயதில், அவரது சகோதரியின் மகள் தனக்கோடியை திருமணம் புரிந்து கொண்டார். எனினும், ராமலிங்கம் அவர்கள் அமைதியை நாடியவர். கடவுள் என்றால் என்ன? என்று அறிய விரும்பி, 1858-ஆம் ஆண்டு சென்னையிலிருந்து புறப்பட்டுப் பல திருத்தலங்களைத் தரிசித்து சிதம்பரத்தை வந்தடைந்தார்.

அங்கே கருங்குழி கிராமத்து மணியக்காரரான திருவேங்கடம் என்பவர் ராமலிங்கத்தை சந்தித்து தனது இல்லத்தில் வந்து தங்கியிருக்குமாறு வேண்டிக்கொண்டார். அவரது அன்புக்குக் கட்டுப்பட்டு அவரது இல்லத்தில் ஒன்பது ஆண்டுகள் தங்கியிருந்தார் ராமலிங்கம்.

அவர் தங்கியிருந்த அறையில் விளக்குக்கு எண்ணெய் வைக்கும் மண்கலயம் உடைந்துவிட, மணியக்காரரின் மனைவி புதுக்கலயம் ஒன்றை வைத்தார். அந்தக் கலயம் பழக்கப்பட வேண்டுமென்று அதில் நீர் நிரப்பிவைத்தவர், பின்னர் அதைச் சுத்தப்படுத்தி எண்ணெய் நிரப்பி வைக்க மறந்துபோனார். கலயத்தில் நீர் அப்படியே இருந்தது.

அன்றிரவு, ராமலிங்கம் வெகுநேரம் வரையில் எழுதிக் கொண்டிருந்தார். விளக்கில் ஒளி மங்கும்பொதெல்லாம் கலயத்தில் இருந்த நீரை,எண்ணெய் என்று நினைத்து விளக்கில் ஊற்றிக் கொண்டே இருந்தார். விடியும்வரை விளக்கு பிரகாசமாகத் தண்ணீரில் எரிந்த அற்புதம் அன்று நிகழ்ந்தது.

கருங்குழியில் தங்கியிருந்தபோது 1865-ஆம் ஆண்டு ராமலிங்கம் 'சமரச வேத சன்மார்க்க சங்கம்' என்ற அமைப்பை உருவாக்கினார். பின்னர் அதை "சமரச சுத்த சன்மார்க்க சத்தியச் சங்கம்' என்று மாற்றியமைத்தார். அதில் மக்கள் பின்பற்றக்கூடிய மிக எளிய கொள்கைகள் பலவற்றை அறிவித்தார். 'ஜீவ காருண்ய ஒழுக்கத்தை' கடைபிடிக்கச் சொல்லி அனைவரையும் வலியுறுத்தினார். பசித்த உயிர்களுக்கு உணவளிப்பது எல்லாப் புண்ணியங்களுக்கும் மேலானது என்று உபதேசித்து வந்த அவர், அன்னதானச் சாலை ஒன்றை அமைக்க எண்ணம் கொண்டார்.

கருங்குழிக்குப் பக்கத்தில் வடலூரில் பார்வதிபுரம் என்னும் கிராமத்து மக்களிடம் எண்பது காணி நிலத்தைத் தானமாகப் பெற்று, 1867-ஆம் ஆண்டு, மே மாதம் 23-ஆம் நாளன்று அங்கு சமரச வேத தருமச்சாலையைத் தொடங்கினார். இங்கு, சாதி, மத,மொழி,இன,நிறப்பாகுபாடுகல் பாராமல் மூன்று வேளையும் பசித்தவர்க்கு உணவளிக்கும் சேவை இன்றும் தொடர்ந்து நடைபெறுகிறது. அவர் அன்று ஏற்றி வைத்த அடுப்பும் இன்று வரை அணையாமல் தொடர்ந்து அன்னம் உருவாக்க எரிந்த வண்ணம் இருப்பது ஆச்சரியம் மிக்க விஷயம்.

தனிமையை விரும்பிய வள்ளலார், வடலூரிளிருந்து விலகி, அருகில் இருக்கும் மேட்டுக்குப்பம் சென்றார். அங்கு சில வருடங்கள் உபயோகப்படாமல் இருந்து வந்த ஒரு வைணவ மதத் திருக்கூடத்தில் தங்கினார். அந்த இடத்துக்கு 'சித்தி வளாகத் திருமாளிகை' என்றும் பெயர் சூட்டினார். அங்கு அவர் அடிக்கடி 'பிரமதண்டிகா யோகம் செய்து வந்தார். அதாவது, இருபுறமும் இரும்புச் சட்டிகளில் நிலக்கரி கனன்று எரிய, நடுவில் அமர்ந்து தியானத்தில் இருப்பது பிரமதண்டிகா யோகம். அகச்சூடு நிறைந்த வள்ளலார், புறத்தே இவ்விதம் சூடேற்றி தம் தேகத்தை அக்னிதேகமாக்கி வந்தார்.

இறைவனை ஒளி வடிவமாகப் போற்றிய ராமலிங்க அடிகளார் வள்ளலார் என்று அறியப்பட்டு சத்திய தருமச்சாலைக்கு அருகில் ஒரு ஒளித் திருக்கோயிலை 1871-ஆம் ஆண்டு அமைக்கத் தொடங்கினார். சுமார் ஆறு மாதங்களில் கட்டி முடிக்கப்பட்ட அந்தத் திருக்கோயிலுக்குச் 'சமரச சுத்த சன்மார்க்க சத்தியஞான சபை' என்று பெயர் சூட்டினார்.

25.1.1872, தை மாதம் 13-ஆம் நாள் தைப்பூசத் தினத்தன்று முதல் ஒளி வழிபாட்டு விழா நடைபெற்றது. 20.10.1973, அன்று திருமாளிகை முன் கொடியேற்றி வைத்து, கூடியிருந்தவர்களுக்கு அருளுரை வழங்கினார். அதையே 'பேருபதேசம்' என்று சொல்லப்படுகிறது.

தமது அறையில் எப்போதும் எரிந்து வந்த தீப விளக்கிச் சித்திவளாகத் திருமாளிகையின் முன்புறம் எடுத்து வைத்தார். மக்களிடம், தீப விளக்கைத் தொடர்ந்து வழிபட்டு வரச் சொன்னவர், தெய்வ பாவனையை இந்த தீபத்தில் கண்டு ஆராதியுங்கள் நான் இப்போது இந்த உடம்பில் இருக்கிறேன். இனி எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வேன்' என்று செய்து அளித்தார்.

1874-ஆம் வருடம் தை மாதம் 19-ஆம் நாள், புனர்பூசமும் பூசமும் கூடும் நன்னாளில் வள்ளலார் அனைவருக்கும் அருளாசி வழங்கி விட்டு இரவு பன்னிரண்டு மணிக்குச் சித்திவளாகத் திருமாளிகைத் திருஅறைக்குள் புகுந்து கதவை மூடிக்கொண்டார். அவரது விருப்பப்படி, அவரது பிரதம சீடர்கள் மூடப்பட்ட அறையின் வெளிப்புறத்தைப் பூட்டினார்கள்.

அன்று முதல் வள்ளலார் ராமலிங்கம் அடிகளார், உருவமாக நமது கண்களுக்குத் தோன்றாமல் அருவமாக நிறைந்து அருட்பெருஞ்ஜோதியாக விளங்கிக் கொண்டிருக்கிறார். வள்ளலார் ஏற்றி வைத்த அணையாதீபம் இங்கே வழிபாட்டில் இருக்கிறது. அவர் சித்திபெற்ற அறையின் பூட்டப்பட்ட கதவுக்கு வெளியே அமர்ந்து தியானம் செய்யலாம். மாதா மாதம் பூச நாட்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும்.தைப்பூசத்துக்கு மூன்றாவது நாள் இந்த அறையை ஜன்னல் வழியாகப் பார்க்க அனுமதிக்கப்படுகிறது.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மனிதத்தன்மை என்ற ஒப்பற்ற ஜோதிப் பிரகாசம் இருக்கிறது. ஆனால், ஆசை, கோபம், சுயநலம். பொய்மை போன்ற பொல்லாத குணங்கள் பல்வேறு திரைகளாகப் படர்ந்து, அந்த மனிதத் தன்மையை அமுக்கி மறைத்துவிடுகிறது. இந்தப் பொல்லாத குணங்கள் விலகி, நல்ல நெறியை அடையும்போது மனிதன் தனக்குள் இருக்கும் தெய்வத்தைத் தரிசிக்கிறான். "ஜோதி தரிசனம்" என்பதும் இது போலத் தான். ஏழு திரைகளை நீக்கிய பிறகுதான் ஜோதியை தரிசிக்க முடியும். கருப்பு, நீளம், பச்சை, சிவப்பு, பொன்னிறம், வெண்மை, கலப்பு வண்ணம் என ஏழு வண்ணத் திரைகள். அதனால் தான் இன்றும் ஜோதி தரிசனம் முன்பு ஏழு வண்ணத் திரைகள் விலக்கப்படும். திரைகள் விலகியதும் "அக்னி பிழம்பாக ஜோதி தரிசனம்" கண்ணாடியில் கண்டதும் நமது ஆத்மாவின் உள்ளே கண்டிப்பாக ஒரு அதிர்வு ஏற்படும் அனுபவம் ஒவ்வொருவருக்கும் உண்டாவது நிஜம்.

அவர் ஏற்றிய அந்த அகல்தீபம் இன்று வரை அணையா தீபமாகப் பராமரிக்கப் பட்டு வருகிறது. அது தான் அந்த அறைக்குள் இருக்கும் அறேமுக்கால் அடி உயரமும் நாலேகால் அடி அகலமும் கொண்ட ஒரு கண்ணாடியில் பட்டுப் பிரதிபலிக்கிறது. அந்த தீபத்தின் எதிரொலியே 'ஜோதி' ஆகும். அந்தக் கண்ணாடி, வள்ளலாரால் நாற்பத்தெட்டு நாட்கள் விசேஷ வழிபாடு செய்யப்பட்டது.

இதற்காக லட்சக்கணக்கில் மக்கள் வந்து குவிந்த வண்ணம் காத்திருப்பார்கள். இறை தரிசனத்தோடு, தங்களையே தாங்கள் தரிசித்துக் கொள்ளும் உணர்வு இந்த சந்தர்ப்பத்தில் கிடைத்து விடுவதாக ஐதீகம். அன்று லாரி லாரியாக உணவுகள் தயாரித்து அன்னதானம் செய்விப்பார்கள். பசி என்பதே வடலூரில் இல்லாது செய்தார் வள்ளலார். பிற உயிர்களின் பசிப் பிணி போக்கி ஒப்பில்லாத திருப்தி இன்பத்தை அளிப்பவர்கள் புண்ணியர்கள். இந்தப் புண்ணியத்துக்கு வேறு எதையுமே இணையென்று சொல்ல முடியாது. இந்தப் புண்ணியத்தைச் செய்கின்ற புண்ணியர்களை, எந்தத் தெய்வத்துக்கு ஈடாகச் சொல்வது..? இவர்கள் அனைவரும் தெய்வ அம்சம் பொருந்தியவர்கள் என்றே சொல்ல வேண்டும். வள்ளலார் ஒரு சித்த மருத்துவரும் ஆவார். அவரது மருந்து குறிப்புகள் இன்றும் மக்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.

கடந்த நான்கு வருடங்களாக சூழ்நிலையின் காரணமாக சிதம்பரத்தில் வாசம் செய்யும் பாக்கியம் பெற்றேன். அப்போது வடலூரில் வள்ளலாரின் "ஜோதி தரிசனம்' காணும் பேரு பெற்றேன். ஒவ்வொருமுறை அங்கு செல்லும் போதும் மக்களின் கூட்டத்தையும், அங்கு அன்னதானம் நடத்தும் பாங்கும், மூட்டை மூட்டையாக அரிசியையும், பருப்பையும் கொண்டு வந்து குவிப்பார்கள் பக்தர்கள். இதைக் காணும் போது நம்மிலும் அது போலச் செய்யத் தூண்டும். பசித்தவர்களுக்குப் பசியாற்றுவதை விரதமாகவே எடுத்துக் கொள்ளத் தூண்டும்.

தமது வாழ்நாளில் ஒரு முறையாவது வடலூர் சென்று திருஅருட்பிரகாச வள்ளலார் அவர்களின் சத்திய ஞானசபை யை தரிசித்து விட்டு வாருங்கள். அங்கு வள்ளலார் இயற்றிய 'திருவருட்பா' வும் 'மகாதேவமாலை' யும் பளிங்கில் செதுக்கியிருக்கும் அழகைப் பார்த்தால் கண்கள் பனிக்கும் .வெண்ணிற ஆடையில் தன்னை மறைத்துக் கொண்டு தானே ஒளியாக நின்ற பெருமான் நமக்கு அருளியிருப்பது பல நல்ல விஷயங்கள். 'கடை விரித்தேன் கொள்வாரில்லை'....என்பதைப் பொய்யாக்க்கும் பெரும் பொறுப்பு தற்போது நம்மில் உள்ளது.


தைப்பூச நாளில் காலை 6.30,10.00 மதியம் 1.00 இரவு 7.00, 10.00 மறுநாள் அதிகாலை 5.30 மணி ஆகிய ஆறு காலங்களில் ஜோதி தரிசனம் நடைபெறும். மானசிகமாகவும் நினைத்துக் கொள்ளலாம். அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.

ஜெயஸ்ரீ ஷங்கர்.




5 கருத்துகள்:

  1. nallennai in english is also known as gingelly oil. It is highly nourishing, healing and lubricating. Other than being used as a flavor enhancing brightness oil.

    பதிலளிநீக்கு
  2. The use of honey as a healing agent is nothing new. peanut oil was an ingredient in medicinal compounds and cures made by the Egyptian physicians five thousand years ago.Vellam is molasses made from sugarcane.karupatti is jaggery got from the palmyra tree.Cold pressing is a technique in which the cold press oil is mechanically pressed from the seeds at temperatures not exceeding 120F.

    பதிலளிநீக்கு
  3. “When oil is refined, it loses a lot of nutrients but cold pressing it in a marachekku oil in chennai ensures that you retain all of it,” says the 35-year-old who works in a software firm.In the ancient days, it was a trend to store water in online copper water bottle vessels and the water would remain healthy for drinking even after days.Peanut oil is cholesterol free, which is one of the major factors contributing to complicated heart conditions such as atherosclerosis. Since cooking oil is used in many different ways..

    பதிலளிநீக்கு
  4. Good sesame oil in tamil has a strong smell when it is opened. The color should be bright brown or gold.

    All of the fats and what is cold pressed coconut oil that we eat are composed of molecules called fatty acids. Biochemically, fatty acids are composed of a chain of carbon atoms connected to one another by chemical bonds..

    neem oil for hair has a wide history of use as a folk remedy around the world, and has been used to treat many conditions. Although it has a harsh odor, it's high in fatty acids and other nutrients.

    பதிலளிநீக்கு
  5. You are writing some Amazing tips. This article really helped me a lot. Thanks for sharing this blog.
    Get pink salt online with amazing offers and discounts

    பதிலளிநீக்கு