ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

சித்தரைப் பெண்


மரகதங்கள் மடி நிறைய ஏந்தியவள்
சித்தரைப் பெண் நீ சிரித்துக் கொண்டே
கேட்டவர்க்கு வேண்டும் வரம் நல்கவென்று
வருடங்கள் தவறாது வந்து நிற்பாய் ...!

இனங்கள் வாழ மனங்கள் வாழ்த்த
மங்கலங்கள் கூடி மங்களங்கள் மகிழ
தேரசைந்து தெருக்களோடு விழாக்கோலம் ...
கோயிலெங்கும் கல்யாண உற்சவங்கள்.

நம்பிக்கை நட்சத்திரமே..ஜயத்தின் சித்திரமே
சித்திரையாய் வருவாய் நீ...முதலாய்
அள்ளிக் கொடுக்கும் அற்புதமே....பைங்கிளிப்
பாவைக்கு சொக்கனைத் தந்த சுந்தரியே..

வீடெங்கும் மணக்கும் மாங்கனிகள்
நாவில் ருசிக்கும் வேம்பின் மலர்
உள்ளம் உவக்கும் வெல்லப்பாகும்
அறுசுவை கண்ட நன்னாளாக்கும்


தோரண மாவிலைகள் தென்றலோடு கூடி
பங்குனிக்கு நன்றி சொல்லிப் பாங்காய்
உனை வரவேற்க வாசலை அடைத்த
சிங்காரச் சித்திரக் கோலங்கள் காண்..

பாரிஜாதமலர் வண்டென நீ நல்ல
சேதி சொல்லிவர கற்கண்டின் இனிமையாய்
சொல்லும் நற்செய்திக்கு மாணிக்கத் தேரைப்
பரிசென இழுத்துச் செல் சித்திரையே...!

2 கருத்துகள்:

  1. ஆஹா... ஓஹோ ... பேஷ்... பேஷ்... பிரமாதம்.

    பாவை விளக்கு மீண்டும் ஒளிவிட்டு எரிய ஆரம்பித்துள்ளது .... மகிழ்ச்சி. :)))))

    பதிலளிநீக்கு
  2. //நம்பிக்கை நட்சத்திரமே..ஜயத்தின் சித்திரமே
    சித்திரையாய் வருவாய் நீ...//

    மளமளவென்று மடல் மடலாக வருவாளோ ... மாட்டாளோ?

    அவள் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாம். கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    பதிலளிநீக்கு