செவ்வாய், 30 டிசம்பர், 2014

சாந்திக் குடில் : பாட்டி வீடும் மதுரையும்...!

சாந்திக் குடில் : பாட்டி வீடும் மதுரையும்...!: நான் பிறந்ததிலிருந்து இந்த ஐம்பது வயது வரையில் எனக்கு நினைவிலிருந்து மறக்காமல் ஸ்படிகமாய் இருக்கும் அமானுஷ்யங்களையும் இனியும் என் ...

திங்கள், 15 டிசம்பர், 2014

இலக்கு..!




உயரப் பறக்கும் பருந்தின்

கண்களுக்கு பஞ்சாரக் கோழியின்

குஞ்சுகளே இலக்கு..!


வழியறியாது  அருவியாய் மலை

இறங்கிவிட்டாலும் காட்டாறுக்கு

பொங்கும் கடலே இலக்கு..!


நாண் இல்லாமல் வண்ணவில்லை

வான் எறிந்து தோற்றாலும்

பூமியே மேகத்துக்கு இலக்கு..!


வில்லை  இழக்கும் அம்பிற்கும்

சுதந்திரச் சிறகுகளை

சிதறடிப்பதே இலக்கு..1


இலக்குகள் அற்ற மனங்கள் இருளில்

தீட்டும் ஓவியமாம்  உணர்வுகளையும்

உருவாக்கி உயிர்ப்பித்திடும் இலக்கு..!



வீழ்ந்து விட்டதாய் சோர்ந்திடாமல் நண்பா

எழுவதற்கான  கனவொன்று இருக்கு

இமயத்தின் உயரமே உனக்குள் இலக்கு..!



தோல்வித் துயரங்கள் தொடர்ந்தாலும்

துணிவைத் துடுப்புகளாக்கி தொடர்ந்து

வெற்றியை காண்பதுவே இலக்கு...!



ஆயிரம் சூழ்ச்சிகள் முன்னிலையில்

வெற்றியின் சூத்திரங்கள் உன்மனதில்

வீழ்ச்சிகள் கடந்திடுவாய் அதுவே இலக்கு...!



இலக்கு எனும் மந்திரச் சொல் செய்திடும்

மனத்துள் தந்திரங்கள் - ஆயின் உலகம்

ஓங்கிட  அன்பு ஒன்றே இலக்கு...!


இலக்கு எனும் அச்சில்  சுழலும் பூமி

இலக்கு அச்சாணியில் இயங்கும் இயற்கை

இலக்கு என்ற தேடலில் வாழும் மனிதம்

இலக்கு சற்று விலகினால் தவறிடும் கணக்கு...!


பூமியின் வளங்கள் அனைத்தும்

இலக்கின்றி தகர்க்கும்போது பொறுமையின்

எல்லைக்கு பூகம்பமே இலக்கு...!


அல்லும் பகலுமென கருமவினைக் கணக்கெடுத்துப்

படைத்துப் பெருக்கும்  ஆக்கும்

தொழில் நிறுத்துவதே பரமனின்  இலக்கு..!

வியாழன், 11 டிசம்பர், 2014

பூவுலகு பெற்றவரம்....!

 



பாரதத்தின் நாடியை
நன்கறிந்த கவிஞன்
ஒய்யார முண்டாசுக்குள்
ஓயாத  எண்ணங் கொண்டவன்

கண்களால் ஈர்த்து விடும்
காந்த மனம் கொண்டவன்
வார்த்தை ஜாலங்களால் வானத்தில்
கார்மேகம் சூழ வைப்பவன்

வான் நட்சத்திரங்களை
பூமழையாக மாற்றுபவன்
மந்திரங்கள் கற்காமல் கவிதை
ஜாலத்தால் மனத்தைக்
கட்டிப்போட்டு நகைப்பவன் 

மீசை துடிக்கத் துடிக்க
ஆசைகளைச் சொன்னவன்
கண்ணனைக் கட்டிப் பிடித்தவன்
காளியோடும்  மாரியோடும் 
மகிழ்ந்து கும்மியடித்தவன்

பாரதக் கொடியை
உயர்த்திப் பிடித்தவன்
விடுதலை வேண்டி
சங்கம் முழக்கியவன்

இறுக்கிச் சுற்றிய முண்டும்
கரு மீசையும் கனல் கண்களும்
கன ஆடையில் அச்சத்தின்
முகவரி  தந்தாலும் அச்சமில்லை
என்று இச்செகத்திற்கு
கற்றுக் கொடுத்தவன்

பாப்பாவிடம் ஒடுங்கிக் குனிந்து
ஓடி விளையாடியவன்
உயர்ந்த குன்றில் அமர்ந்து கொண்டு
வாய்ச்சொல் வீரர்களை
வெகுண்டெழச் செய்தவன்

புகழேணி ஏறாமல் புண்ணிய
ஏணி ஏறியவன் பாதை மாறாமல்
கவிதை போதைக்குள் மூழ்கியவன்
ஏழ்மையை எழுத்திலிருந்தும்
எண்ணத்திலிருந்தும் விரட்டியவன்
வீரத்தை வாளாக்கி வணங்கி
பாட்டுக்குள் திணித்தவன்

கருவடிக் குப்பத்து மாமர நிழலில்
சமரச இடத்தில் குயிலை கூப்பிட்டு
ஆன்ம ரகசியம் சொன்ன தீ ..!
பாரதி உந்தன் பார்வை தீ...!

காலங்கள் நீளாது எனக்
கண்டுதானோ காவியக் கருத்துக்களை
காப்பிய பாரதத்தை
கண்ணனின் பெருமைதனை
பெண்ணின் புதுமைகளை

பொக்கிஷக் குவியல்களாக
புதைத்து விடவா பிறந்து வந்தாய்...!
பாரதம் கண்டெடுத்த புதையலாக
பாரதி நீயன்றோ பூவுலகு பெற்றவரம்....!


ஜெயஸ்ரீ ஷங்கர்

பாவை விளக்கு....!: பாரதி நீயே எங்கள் வரம்....!

பாவை விளக்கு....!: பாரதி நீயே எங்கள் வரம்....!:       பாரதத்தின் நாடியை நன்கறிந்த கவிஞன் முன்டாசுக்குள் ஒய்யார எண்ணங் கொண்டவன் கண்களால் ஈர்த்து விட...

பாரதி நீயே எங்கள் வரம்....!

 
 
 
பாரதத்தின் நாடியை
நன்கறிந்த கவிஞன்
முன்டாசுக்குள் ஒய்யார
எண்ணங் கொண்டவன்

கண்களால் ஈர்த்து விடும்
காந்த மனம் கொண்டவன்
வார்த்தை ஜாலங்களால்
வானத்தில் மேகம் சூழ வைப்பவன்

வான் நட்சத்திரங்களை
பூமழையாக மாற்றுபவன்
மந்திரங்கள் கற்காமல்
கவிதை ஜாலத்தால் மனத்தைக்
கட்டிப் போட்டுச் சிரிப்பவன்

மீசை துடிக்கத் துடிக்க
ஆசைகளைச் சொன்னவன்
கண்ணனைக் கட்டிப் பிடித்தவன்
காளியோடும்  மாரியோடும் 
மகிழ்ந்து கும்மியடித்தவன்

பாரதக் கொடியை
உயர்த்திப் பிடித்தவன்
விடுதலை வேண்டி
அடிமையாய் அழுதவன்

உயர் முண்டும் கரு மீசையும்
கனல் கண்களும் கன ஆடையில்
அச்சம் தந்தாலும் அச்சமில்லை
என்று கற்றுக் கொடுத்தவன்

பாப்பாவிடம் குனிந்து
ஓடி விளையாடியவன்
உயர்ந்த குன்றில் அமர்ந்து கொண்டு
வாய்ச்சொல் வீரர்களை
வெகுண்டேழச் செய்தவன்

புகழேணி ஏறாமல் புண்ணிய
ஏணி ஏறியவன்
ஏழ்மையை எழுத்திலிருந்து
விரட்டியவன்
வீரத்தை வாளாக்கி
பாட்டுக்குள் திணித்தவன்

கருவடிக் குப்பத்து மாமர நிழலில்
சமரச இடத்தில் குயிலை கூப்பிட்டு
ஆன்ம ரகசியம் சொன்னவன் நீ..!

காலங்கள் நீளாது எனக்
கண்டுதானோ காவியக் கருத்துக்களை
காப்பிய பாரதத்தை
கண்ணனின் பெருமைதனை
பெண்ணின் புதுமைகளை

பொக்கிஷக் குவியல்களாக
புதைத்து விட்டுச் சென்றுவிட்டாய்
பாரதம் கண்டெடுத்த புதையலாக
பாரதி நீயே நாங்கள் பெற்ற வரம்....!