திங்கள், 17 ஆகஸ்ட், 2015

அவர்களும் நானும்..!

11911066_876881972366003_724950865_n


இந்தக் கதவுகளைப்  
போலவே 
மனப்பேதங்கள் 
அவர்களிடத்தும்...!

நித்தம் நித்தம் 
காற்றில் இடிக்கும்  
கதுவுகளாய் 
வார்த்தைகள் ..
அவர்களின் 
பரிமாற்றங்கள்..!

பாதுகாப்பாய் இணைத்திட 
அங்கே தாழ்பாள் இல்லை 
பூட்டுமில்லை 
சாவியுமில்லை...!

பாதுகாக்கப் பட 
வேண்டிய...நான் 
வீட்டு வாசலில்...!

அவர்களோ...
திறந்த கதவுகளாய் 
மன விடுதலைக்காக 
கோர்ட்டின் வாசலில்..!

=+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++=


இரட்டைச் சம்பளமும்   
குறைவு தானாம்...!
குடும்பமாய் வாழ மட்டும்   
ஒற்றைக் குழந்தை 
கூட அதிகமாம் ..!

பாட்டியும் தாத்தாவும் 
ஆளுக்கொரு 
முதியோர் இல்லத்தில்
தனித் தனியாக...!
உறவுகள்  எதுவும் 
ஒட்டாத தனிவீடிது..! 
பள்ளி திரும்பியதும் 
பூட்டு தான் 
சிரித்து வரவேற்கும் 
விரல்பிடித்து..விளையாடும் 
நித்தம் என்னோடு...!

ஆறுமணி வந்துவிட்டால் 
அலுத்துவிடும் பூட்டெனக்கு..
காற்றைக் கட்டிக் கொண்டு 
கண்களில் தேடலோடு 
அம்மா வரும்வரையில்  
நானும் நிற்கிறேன் 
அனாதையாய்..!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வீட்டுக் காவலுக்கு  
இங்கே நான் .!
சங்கிலி கட்டாத 
நாய்குட்டியாக 
கைகளைக் கட்டி 
நிற்கிறேன்...!
பூட்டே..பூட்டே..!
திறந்திடு சீஸே ..!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

1 கருத்து: