திங்கள், 10 ஏப்ரல், 2017

தாயும் சேயும்....!

Image result for தாயும் சேயும்

உடலுக்குள் இரு உயிர்   
ஒரே  உயிரில் இரு உடல்கள் 
இரத்த பந்தத்தில் 
வந்த சொந்தம் 
உறவில் உயர்ந்தது 
நித்தம் வளர்வது 
பாசத்தின் உச்சம் 
பிறப்பெனும் எச்சம்..
தொப்புள்கொடியும் பாசக்கயிறாகும் 
அதிசயத்தின் உச்சம்  
பூஜ்யமான வாழ்வில் 
ராஜ்யத்தை ஆள்வதும் 
அணைப்பதிலிருந்து 
எரிப்பது வரையில் 
கை விலங்காகி 
விளங்காத புதிருக்கு 
புதிதாக மனித விதையை 
நட்டுவைத்து வம்சம் விதைக்கும் 
தாயும் ,,,,, நம்பிக்கை கரங்களை 
அவள் நோக்கியே நீட்டி 
உலகம் படிக்கும் சேயும் 
நிறைந்த உலகமிது 
சூரிய சந்திரன் போல் 
மறைந்தும் வளர்ந்தும் 
புவியாய் சுழலும் வரம்...!


ஜெயஸ்ரீ ஷங்கர்,
ஹைதராபாத் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக